Category Archives: ஜல்லிக்கட்டு
பீட்டாவுக்கு வசதியாக மாறிய சட்டம் – ஜல்லிக்கட்டு நடப்பது சந்தேகம்!
May 26, 2017 05:49 pm
காளை மாடுகளின் கொம்புகளில் வர்ணம் பூசுவதை கூட மத்திய அரசின் புதிய விதிமுறை தடுத்து நிறுத்தியுள்ளது.
இதன்படி பார்த்தால் இனிமேல் ஜல்லிக்கட்டு நடைபெறுவது கேள்விக் குறியாகியுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில், 1960ம் ஆண்டு, மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இனிமேல், மாடுகளைஇறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது.
இந்த விதிமுறையில் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.
பசு, காளை, ஒட்டகம், எருமைமாடு போன்றவற்றை சிறிதளவும் கொடுமைப்படுத்திவிட கூடாது என்பதே விதிமுறை சாராம்சம்.
விசித்திரம், வேதனை இந்த அடிப்படையில் ஒரு விசித்திர விதிமுறையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
அதாவது பசு மற்றும் காளைகளின் கொம்புகளில் பெயிண்ட் அடிப்பது கூட குற்றம்தானாம். இவ்வாறு செய்வோருக்கு சிறை தண்டனை கூட கிடைக்கும்.
மழையில் மாடு நனையக் கூடாதாம் மழையில் மாடு நனையக் கூடாதாம் மாடுகளுக்கு அலங்காரம் செய்வது, ஆபரணங்கள் அணிவிப்பது (தமிழ் விவசாயிகளின் பாரம்பரிய வழக்கம் இது), ஆகியவற்றையும் அரசு தடை செய்துள்ளது.
இந்த கால்நடைகளை வளர்ப்பவர் அதை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
மோசமான வானிலையில் இந்த கால்நடைகளை இருக்க விடக்கூடாது (அப்படியானால் வெயில், மழை காலத்தில் தொழுவத்தில் எப்படி மாடுகளை கட்டுவார்கள்?).
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு இப்படி விதிமுறைகளை அடுக்கிக்கொண்டே போகிறது மத்திய அரசு. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மழை, வெயில் கூட படாமல் மாட்டை பாதுகாக்க சட்டம் சொல்கிறதே அப்படியானால் அதை பிடித்து மேலே தொங்கியபடி அடக்கும் ஜல்லிக்கட்டு நிலைமை என்னவாகும்?
இந்த செய்தி முதன்மை செய்தி சேவையில் இருந்து.
கீரிப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா
Published on : 07th May 2017 08:47 AM
கீரிப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம், மல்லியகரையை அடுத்த கீரிப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா விமரிசையாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மதுரை,திருச்சி, புதுக்கோட்டை, மணப்பாறை, கூடமலை, கொண்டயம்பள்ளி, தம்மம்பட்டி, ஈரோடு, காங்கயம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
இதே போல திருச்சி, மதுரை, மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் 550 பேர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட சிறந்த மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாடுகளில் தங்கக் காசு, தங்கச் சங்கிலி, வெள்ளி அரைஞாண்கயிறு, பட்டுவேட்டி உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருள்களை கட்டியிருந்தனர். அதே போல் மாடுபிடிவீரர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
மேலும், ஜல்லிக்கட்டு விழாவையொட்டி ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பொன்கார்த்திக்குமார் தலைமையில் மல்லியகரை காவல் ஆய்வாளர் (பொ) தட்சிணாமூர்த்தி, ஆத்தூர் காவல் ஆய்வாளர் கேசவன், தலைவாசல் காவல் ஆய்வாளர் எஸ்.செல்வராஜ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த செய்தி தினமணி இனைதளத்தில் இருந்து.
புள்ளம்பாடியில் ஜல்லிக்கட்டு: 700 காளைகள் பங்கேற்பு; 15 பேர் காயம்
Published on : 17th May 2017 06:19 AM
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க முயன்ற 15 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.
புள்ளம்பாடி பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள குளுந்தாளம்மன் கோயில் திருவிழா அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டுப் பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் காத்தானின் 10 காளைகள் மற்றும் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளைகளை அடக்க இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டியபோதும், வாடிவாசல் வழியே வந்த பெரும்பான்மையான காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சீறி பாய்ந்து சென்றன. 15 மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயமேற்பட்டது. இவர்களுக்கு அந்தப் பகுதியில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
ஜல்லிக்கட்டு உரிய விதிகளின்படி நடைபெறுகிறதா என லால்குடி வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜுலு, வட்டாட்சியர் ஜவஹர்லால் நேரு ஆகியோர் பார்வையிட்டனர்.லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பேட்ரிக் தலைமையில் 5 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காளைகளை அடக்கிய சிறந்த வீரர்களுக்கும், வீரர்களிடம் அகப்படாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசுகள், வெள்ளிக்காசுகள், சைக்கிள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை விழா குழுவினர் பரிசாக வழங்கினர்.
இந்த செய்தி தினமணி இனையதளத்தில் இருந்து.
ஜல்லிக்கட்டு போட்டி : ஜூன் முதல் தடை
பதிவு செய்த நாள் 16 மே 2017 07:33
தமிழகத்தில், ஜூன் முதல், ஏழு மாதங்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த, அரசு தடை விதித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தடையால், தமிழகத்தில், இரு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, மாணவர்கள், இளைஞர்கள், நடப்பாண்டு ஜனவரியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி, விண்ணப்பங்களை பரிசீலித்து, ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடந்த பகுதிகளுக்கு மட்டும், கலெக்டர்கள் அனுமதி அளித்து வருகின்றனர்.
– நமது நிருபர் -தினமலர்
மல்லுக்கட்டு இன்றி நடக்குமா ஜல்லிக்கட்டு – முட்டுக்கட்டை போட முயற்சிகள் மும்முரம்
மதுரை : தை பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் ஜல்லிக்கட்டுக்காக காளைகளுக்கு பயிற்சி அளித்து தயார்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இதற்கிடையே ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் முட்டுக்கட்டை போட தீவிர முயற்சிகள் நடப்பதால் தடங்கலின்றி நடக்குமா என்ற ஐயமும் எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டு… தமிழகத்தில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் வீர விளையாட்டு. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, கிராம கோயில் திருவிழா, சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஆடுகளத்தில் சீறிப்பாயும் முரட்டு காளையை அடக்கும் வீரர்களுக்கு பொன்னும், பொருளும் பரிசாக அளிக்கப்படும்.
அடக்க முடியாவிட்டால், அஞ்சாத காளை என புகழ்ந்து அதற்கு பரிசளிக்கப்படும். தமிழர்களின் பாரம்பரியமான இந்த வீர விளையாட்டு கிராம கோயில் திருவிழா வழிபாட்டில் ஒன்றாக நம்பப்படுகிறது.தமிழகத்தில் 650க்கும் மேற்பட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு நடந்து வந்தது. மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகத்தையே கவர்ந்து இழுக்கும் சிறப்பு பெற்றது.தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடக்க விடாமல் முடக்கி போடும் திட்டத்துடன் 6 ஆண்டுகளுக்கு முன் விலங்குகள் நல சங்கம் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகாகாந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அன்றைக்கு எழுந்த சோதனை இன்னும் முழுமையாக நீங்காமல் சோதனை மேல் சோதனையாக நீடிக்கிறது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அங்கீகாரம் அளித்து 2009ல் தனி சட்டம் இயற்றியது. இதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் கடும் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்டது. இதன் பிறகு இந்தி நடிகை ஹேமமாலினி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டுமென கொடி தூக்கி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதனால் சர்க்கசில் புலி, சிங்கம், கரடிகளுக்கு தடை விதிக்கப்பட்டது போல் விலங்குகள் பட்டியலில் காளையையும் சேர்த்து 2011ல் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு பெரும் தடங்கலை உண்டாக்கியது. இதை மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி வைத்தது.
ஆனால் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டுதலை பின்பற்றும்படி தமிழக அரசு அறிவுறுத்தியது. இதன்பேரில் மாவட்ட கலெக்டர்கள் விருப்பப்படி முடிவுகள் எடுக்கப்பட்டன. சில கலெக்டர்கள் 77 நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்கினர். சில கலெக்டர்கள் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுக் கொள்ளும்படி நழுவினர்.கடந்தமுறை கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டுகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளன. சில ஊர்களில் கட்டுப்பாடுகள் மீறிய ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டுகளில் உயிர்பலிகள் ஏற்பட்டுள்ளன. காளைகளும் சித்ரவதை செய்யப்பட் டதாகவும், விதிமீறல்கள் நடைபெற்றதாகவும் பிராணிகள் நல வாரியம் புகார் தெரிவித்து மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு முட்டுக்கட்டை போட முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதற்காக, முந்தைய ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டுகளில் பலியானோர், காளைகள் சித்ரவதை காட்சி வீடியோ, கட்டுப்பாடு மீறல் குறித்து பட்டியல் தயாரித்துள்ளது. மேனகா காந்தியும், ஹேமமாலினியும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர் கள் அஞ்சுகிறார்கள். காளையை விலங்குகள் பட்டியலில் சேர்த்து தடை விதித்த மத்திய அமைச்சரின் உத்தரவும் ரத்து செய்யப்படாமல் 2 ஆண்டுகளாக நீடிக்கிறது. இதை ஒரு ஆயுதமாக கையில் தூக்கிக் கொண்டு மிரட்டுவதாக அஞ்சப்படுகிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஒரு மாதத்திற்கு முன் கலெக்டரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதன்படி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ல் மதுரை அவனியாபுரம், 15ல் மதுரை பாலமேடு, 16ல் உலகபுகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் மனு அளிக்கப்பட்டு விட்டது.ஜல்லிக்கட்டுக்காக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முரட்டு காளைகள் தயாராகி வருகின்றன. சத்துள்ள தீவனம், நீச்சல் பயிற்சி, தோட்டங்களில் மணல் மேட்டில் முட்டி மோதுதல் உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுன்றன.
இதேபோல் காளையை அடக்க காளையர்களும் சிறப்பு பயிற்சி பெற்று ஜரூராகி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு 6 ஆண்டுகளாக ஏதாவது ஒரு சோதனை எழுந்து, தடங்கல் ஏற்படுவதும், கடைசி நேரத்தில் நீங்குவதுமான நிலையே நீடிக்கிறது. கடுமையான கட்டுப்பாடுகளால் 400க்கும் மேற்பட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு முற்றிலும் தடைபட்டு போனது. எனவே தற்போது நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தடுத்து தடங்கல் ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.
எது சித்ரவதை?
ஸ்பெயின், தென் அமெரிக்கா, தென்கொரியா போன்ற நாடுகளில் காளைகளுடன் சண்டையிட்டு அடக்கும் பந்தயங்கள் நடக்கின்றன. வட்ட வடிவமான அரங்கில் காளைகள் திறந்து விடப்படும். வீரர்கள் குதிரையில் அமர்ந்தபடி காளை மீது ஈட்டிகளை வீசி, அது தளர்ந்ததும், அதன் முகத்தின் முன் வண்ணத் துணிகளை காட்டியபடி வாளை பாய்ச்சி கொல்வார்கள். அது சித்ரவதை. ஜல்லிக்கட்டில் காளைகள் ஆடுகளத்தில் இறங்கியதும் ஓரிரு நிமிடங்களில் துள்ளி பாய்ந்தபடி ஓடிவிடும். அதற்குள் திமிலை பிடித்து அடக்க வேண்டும். அதோடு முடிந்தது.
மிரட்டும் ஹேமமாலினி
ஜல்லிக்கட்டுக்கு எதிராக மேனகா காந்தியை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த இந்தி நடிகை ஹேமமாலினி தூக்கிய கொடியை கீழே போடவில்லை. மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதி தடுக்க முயற்சிப்பதாகவும், இதற்காக பிராணிகள் நல வாரியத்தில் இருந்து தகவல்களை கேட்டு பெற்றுள்ளதாகவும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
இந்த செய்தி ‘தினகரன்’ (இணையதளம்) தொகுப்பில் 2013-12-23 அன்று வெளிவந்தது !
ஜல்லிக்கட்டு – தமிழனின் வீர மரபு !
தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் முதன்மையானது ஜல்லிக்கட்டு. இதற்கு ‘மஞ்சுவிரட்டு’, ‘ஏறுதழுவுதல்’ என பல பெயர்கள் உண்டு. பல நூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்த வீர விளையாட்டு இன்றும் தமிழகத்தின் பல கிராமங்களில் விளையாடப்படுகிறது. ஆங்கில மாதங்கள் ஜனவரி முதல் ஜூலை வரை பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.
பொங்கல் கொண்டாட்டமாகவும், சிவராத்திரிக்கும் வேறு பல கோவில் திருவிழாக்களுக்கும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
2006ம் ஆண்டுமுதல் இன்றுவரை பல்வேறு சோதனைகளை சந்தித்துவருகிறது, நமது வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு.